(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சீரற்ற கால நிலையால் தாமதித்து ஆரம்பமான இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான கடைசி ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும்.
கொழும்பில் நடைபெற்ற 11 போட்டிகளில் 5 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக மூன்றே கால் மணித்தியாலங்கள் தாமதித்து மாலை 6.15 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் மாலை 6.34 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இரவு 8.20 மணியளவில் ஆட்டம் கைவிடப்பட்டதாக ஐசிசி போட்டி தீர்ப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படட்து.
இதற்கு அமைய அணிகள் நிலையில் 5 புள்ளிகளுடன் இலங்கை 5ஆம் இடத்தில் இருக்கிறது. பங்களாதேஷுடனான போட்டியில் வெற்றியீட்டிய இலங்கைக்கு 3 போட்டிகளில் சீரற்ற காலநிலை காரணமாக முடிவு கிட்டவில்லை.
இன்னும் ஒரு போட்டி மீதமாகவுள்ள நியூஸிலாந்து 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
பங்களாதேஷுக்கு இன்னும் ஒரு போட்டி இந்தியாக்கு எதிராக இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM