(நெவில் அன்தனி)
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மாலை 6.15 அணிக்கு ஆரம்பமான போதிலும் 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இப் போட்டி மழை காரணமாக மூன்றே கால் மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமானது.
கொழும்பில் இந்த வருடத்துக்கான கடைசி ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியாக அமையவுள்ள இப் போட்டி அணிக்கு 34 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் மாலை 6.34 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அணிகள்
இலங்கை: விஷ்மி குணரட்ன, சமரி அத்தபத்து (தலைவி), ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சிவனி, தெவ்மி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதாரா, இனோக்கா ரணவீர.
பாகிஸ்தான்: முனீபா அலி, ஒமெய்மா சொஹெய்ல், சிட்ரா ஆமின், நட்டாலியா பெர்வெய்ஸ், பாத்திமா சானா (தலைவி), ஈமான் பாத்திமா, சியேடா ஆரூப் ஷா, ராமீன் ஷமிம், ஆலியா ரியாஸ், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM