இலங்கை இலக்கிய வளத்திற்கு பங்களிக்கக்கூடிய புதிய தலைமுறை எழுத்தாளர்களை வளர்க்கும் நோக்கத்துடன் அரச இலக்கியக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கைக் கலைக் கழகம் ஆகியவை இணைந்து 'ஆக்க இலக்கிய யாத்திரை – 2025' என்ற தலைப்பில் ஒரு படைப்பிலக்கியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.
போட்டி வகைகள்
படைப்புகளை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பின்வரும் இரண்டு பிரிவுகளின் கீழ் சமர்ப்பிக்கலாம்:
1. கவிதை
* ஒவ்வொரு பங்குபற்றுநரும் ஒவ்வொரு மொழிமூல ஊடகத்திலும் ஒரு கவிதையைச் சமர்ப்பிக்கலாம்.
* கவிதை இரண்டு (2) A4 பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
2. சிறுகதை
* ஒவ்வொரு பங்குபற்றுநரும் ஒவ்வொரு மொழிமூல ஊடகத்திலும் ஒரு சிறுகதையைச் சமர்ப்பிக்கலாம்.
* சிறுகதை 3,000 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
பொது நிபந்தனைகள்
* இப்போட்டி புதிய எழுத்தாளர்களுக்கானது.
* தேசிய அளவிலான இலக்கியப் போட்டிகளில் விருதுகளை வென்ற அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை வெளியிட்ட எழுத்தாளர்கள் பங்குபற்ற தகுதியற்றவர்கள்.
* அனைத்து சமர்ப்பிப்புகளும் சுயமானதாகவும், வெளியிடப்படாத படைப்புகளாகவும் இருக்க வேண்டும்.
* திருட்டு, தழுவல் அல்லது முன்னர் எழுதப்பட்டு பரிசு பெற்ற படைப்புகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
* சமர்ப்பிப்புகள் A4 தாளின் ஒரு பக்கத்தில் தெளிவாக கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது கணினியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
* பக்கங்களுக்கு இலக்கங்கள் இடப்பட வேண்டும்.
* பங்குபற்றுநர் தங்கள் சமர்ப்பிப்பின் பிரதியை தம்வசம் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் சமர்ப்பிக்கப்பட்டவை மீண்டும் திருப்பி அனுப்பப்படாது.
சமர்ப்பிப்பு விவரங்கள்
அனைத்து சமர்ப்பிப்புகளிலும் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும்:
* விண்ணப்பதாரரின் பெயர்
* படைப்பின் தலைப்பு
* பக்கங்களின் எண்ணிக்கை
* நிரந்தர முகவரி
* தொலைபேசி /வட்ஸ்அப் இலக்கங்கள்
* மின்னஞ்சல் முகவரி
* படைப்பு சுயமானது என்பதை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துதல்
சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி : 30 நவம்பர் 2025
சமர்ப்பிப்புகளை பின்வரும் முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபாலில் அனுப்பலாம் அல்லது நேரடியாக கையளிக்கலாம்:
செயலாளர், (இலக்கியப் போட்டி - 2025)
இலங்கைக் கலைக் கழகம்
இரண்டாம் கட்டம் (4வது தளம்), செத்சிரிபாய
பத்தரமுல்ல.
Secretary (Literary Competition – 2025)
Sri Lanka Arts Council
Second Stage (4th Floor), Sethsiripaya
Battaramulla.
மதிப்பீடு மற்றும் விருதுகள்
அனைத்து படைப்புகளும் இலக்கிய நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.
வெற்றியாளர்கள் டிசம்பர் 2025இல் விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவார்கள்.
தொடர்புத் தகவல்
தமிழ் மொழி:
எஸ். முரளிதரன் – 071 209 4209
(உறுப்பினர், அரச இலக்கியக் குழு)
சிங்கள மொழி:
கமல் பெரேரா – 077 365 5151 / 071 8670 913
(தலைவர், அரச இலக்கியக் குழு)
ஆங்கில மொழி:
டி.வி. கால்லகே – 071 576 6355
(உறுப்பினர், அரச இலக்கியக் குழு)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM