(நெவில் அன்தனி)
இந்தூர் ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் 40ஆவது ஓவரில் இங்கிலாந்து அதன் 6ஆவது விக்கெட்டை இழந்தபோது மொத்த எண்ணிக்கை 166 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் மத்திய வரிசை வீராங்கனைகளின் சிறந்த பங்களிப்புடன் இங்கிலாந்து கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
முன்வரிசையில் டமி போமொன்ட் நிதானத்துடன் 105 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட அமி ஜோன்ஸ் (18) ஹீதர் நைட் (20), சொஃபியா டன்க்லி (22), அலிஸ் கெப்சி (38), சார்லி டீன் (26) சொஃபி எக்லஸ்டோன் (10 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
245 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடவுள்ளது.
இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக இருக்கின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM