எம்.மனோசித்ரா
வெலிகம பிரதேச சபை தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகள் நிறைவடையும் வரை இந்தக் கொலை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது. இவ்வாறான திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாரானாலும் அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெலிகம பிரதேச சபை தவிசாளர் யார் என்ற தனிப்பட்ட காரணிக்கு அப்பால் பொலிஸாரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அரசியல்வாதியானாலும், வர்த்தகரானாலும், வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களானாலும், பொது மக்களானாலும் இவ்வாறான துப்பாக்கிச்சூடுகளுக்கு இலக்காகும் போது பொலிஸாரால் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அந்த விசாரணைகளுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு கைது செய்யப்படுபவர்களிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் கிடைக்கும் தகவல்களுக்கமைய வெளிநாடுகளிலுள்ள சந்தேகநபர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் இந்தக் கொலை தொடர்பிலும் 4 பொலிஸ் விசாரணை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. விசாரணைகள் நிறைவடையும் வரை இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பாரிய பொறுப்பு அரசாங்கத்திடமுள்ளது. பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிகளின் புலக்கத்தால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் அதிகரித்துச் செல்கின்றன.
இதனை முற்றாக ஒழிப்பதற்காக சமூகம் என்ற ரீதியில் அனைவரும் இது குறித்த புரிதலுடன் செயற்பட வேண்டும். இவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் படிப்படியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM