நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஆறு மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 335 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, மேலும் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்றால் சேதங்கள் பதிவாகியுள்ளன.
அவிசாவளையில் 17 வயது மாணவி ஒருவர் வடிகாலில் விழுந்து உயிரிழந்ததுடன், நாட்டின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்த 12 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன, அதேசமயம் மண்சரிவால் மலையக ரயில் போக்குவரத்து தடம் புரண்ட நிலையில், நாளை நண்பகல் வரை சேவைகள் வழமைக்கு திரும்பாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM