வவுனியா, தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் நீண்ட நாட்களாக குப்பை வீசிவந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா தோணிக்கல் மதகு வைத்தகுளம் பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் இப்பகுதியில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் சிலர் தொடர்ச்சியாக குப்பைகளை வீசி வந்துள்ளனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது குறித்த வீதியில் குப்பை வீசிய குறித்த அரச உத்தியோகத்தரை கடந்த 31ஆம் திகதி கையும் மெய்யுமாக பிடித்து அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற சட்ட நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவான் அரச உத்தியோகத்தரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.
குறித்த பகுதியில் குப்பைகளை வீசுகின்றவர்களில் அனேகமானவர்கள் அரச உத்தியோகத்தர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM