வாழைச்சேனை - காவத்தமுனை பகுதியில், முச்சக்கர வண்டி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மிஹிந்தலை - சீப்புகுளம்-கலென்பிந்துவெவ வீதியின் பலுவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மிஹிந்தலை, சீப்புகுளத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் தம்மன்னாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை கைது செய்ய மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM