சந்தியான் ஆசிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதலவர் மோகனதாஸ் சுவாமிகளினால், செவ்வாய்க்கிழமை (14) நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிதி வழங்கல் நிகழ்வு சமாதான நீதிவான் P.பத்மராஜின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்றது.
மொத்தம் ஐந்து (05) கோவில்களும், கண்டி மாவட்டம் பஸ்பாகே கோரளை பிரதேசம் சார்ந்த இரண்டு (02) ஆலயங்களும் இந்நிதி வழங்கலின் கீழ் நடைபெற்றன.
வழங்கப்பட்ட நிதி விவரம்:
குயிடஸ்பெரி மேற் பிரிவி – ரூ. 100,000
தலபத்தனை Go பிரிவு – ரூ. 100,000
தும்பகஸ்தலாவை பிரிவு – ரூ. 100,000
போகில் கீழ்பிரிவு – ரூ. 100,000
கெட்டபுலா நடுப்பிரிவு – ரூ. 25,000 (வர்ணப்பூச்சு )
தொங்க தோட்டம் – ரூ. 100,000
வெஸ்டோல் ரிலாகல – ரூ. 100,000
அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று நிதி வழங்கிய சுவாமிகள், கோவில் பரிபாலனச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என வாழ்த்தி, பக்தர்களின் ஒத்துழைப்பையும் பாராட்டினர்.
இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, நிதி வழங்கிய சுவாமிகளுக்கும், இதற்கான வேண்டுகோளை வைத்த சமாதான நீதிவான் P. பத்மராஜுக்கும் நன்றி தெரிவித்தனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM