ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

13 Oct, 2025 | 04:43 PM
image

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியில் 12 ஆம் திகதி நேற்று மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் போதைப் பொருட்களை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய பெண் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07
news-image

'முழு நாடுமே ஒன்றாக': போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-11-10 13:27:38
news-image

"ஹோரி சுத்தா" கைது!

2025-11-10 12:39:14
news-image

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி திடீரென...

2025-11-10 12:35:54
news-image

யாழில் குழு மோதல் ; ஐவர்...

2025-11-10 12:17:44