அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள செயின்ட் ஹெலினா தீவுப் பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததோடு, 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உணவு விடுதியுடனான இந்த பாரில் அதிகளவிலானோர் மது அருந்திக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவேளை சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஏனையவர்கள் பாதுகாப்பு கருதி பாரிலிருந்து வெளியேறி, அருகில் உள்ள கடைகள், கட்டடங்களுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளானோரின் உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட அதேவேளை சுகாதார பணியாளர்கள் உடனடியாக களத்துக்குச் சென்று, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாரில் பணியாற்றும் சமையற்காரர் ஒருவர், அவ்வேளை தான் நிறைய துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் இதுவரை வெளிப்படாத நிலையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்பதை கண்டறிய பியூபோர்ட் கவுன்ட்டி செரீப் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM