விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார் என சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதனை நிராகரித்த தலைவரே பிரதமர் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தமை துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் இரா ணுவ வெற்றியை குருட்டுத்தனமாக பயன்படுத்தி முன்னாள் ஆட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்த முனைந்தனர் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாற்ப்பதாண்டு கால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக் கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் அரசியல் பிரவேசம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாற்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
அன்றைய காலத்தில் மத்திய பொருளாதார நிலைமைகளே காணப்பட்டன. இந்நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். கனவான்களுக்கு அவசியமான கொள்கையினைக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு நிழல்போன்று செயற்பட்டார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தில் நம் பிக்கை கொண்டிருந்தவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் இணைந்து பணியாற்றியதோடு சமூகப்பொருளாதாரக் கொள் கைகளையும் பின்பற்றலானார்.
நுண்ணறிவும் துணிவும் பொறுமையும் நிதானமும் கொண்டு விளங்கிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய குணாம்சங்களைக் கொண்டவராவார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது எதிராளிகள் என்றாலும் கூட கோபப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட அச்சுறுத்தல் விடுக்காது தெளிவாக கருத்துக்களை முன்வைப்பவராக இருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ் விதமாக நேர்மையாகச் செயற்பட்டிருந் தார் என்பதைப் பார்க்க முடியும். கொள்கை மீதான பற்றும் நேர்மையான செயற்பாடும் கட்சியின் மீதான அர்ப்பணிப்பும் அவருடைய சிறப்பான பண்புகளாக காணப்படுகின்றன.
தனிப்பட்ட முறையில் அவருடன் இணைந்து செயற்பட்ட ஒருவராக நானும் இருக்கின்றேன். 2001 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது அமைச்சரவையில் இருந்து நான் அகற்றப்பட்டதன் பின்னரான ஐந்து மாதகால பகுதியில் அவருடைய சீர்செய்யும் செயற்பாடுகளை என்னால் நன்கு அவதானிக்க முடிந்தது.
அதேநேரம் எந்தவொரு விமர்சனத்தினையும் எதிர்கொள்தல் மற்றும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற தன்மையும் அவரிடத்தில் காணலாம். குறி ப்பாக விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பிர தமர் ரணிலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
விடுதலைப்புலிகள் முன்வைத்த இடை க்கால அரசு கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றிருந்தால் 2005 ஆம் ஆண்டே அவர் ஜனாதிபதியாகியிருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை; நாட்டின் நலன் கருதி அதனை நிராகரித்தார்.
அவ்வாறிருக்கையில் கடந்த காலத் தில் இருந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தமையை இட்டு நான் கவலை யடைகின்றேன். இராணுவம் பெற்ற யுத்த வெற்றியை குருட்டுத்தனமாக பயன்படு த்தினார்கள். இனங்களுக்கிடையில் பிரி வினைகளை ஏற்படுத்தும் செயற்பாடு களை முன்னெடுத்தார்கள். இந்த நாட் டின் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி னார்கள்.
அவற்றுக்கெல்லாம் எதிராக எதிர்க் கட்சி யில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குரலெழுப்பி இன ஒற்றுமையை மையப் படுத்தி செயற்பட்டார். அவருக்கு எமது கட்சி மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துக் களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM