அறிவின் தீபம் பொங்கியதொரு கோபுரம்,
அழிந்த பின் எழுந்து நின்றது – நம் யாழின் பெருமை சுமந்த தரிசனம்.
புத்தகத் தூண்கள் பேசின – பொலிவற்ற காலத்தின் கதைகளை,
மனம் பேசும் மொழியில் விழித்தெழும் மௌனப் பெருமைகளை.
அங்கே ஒரு வரி – மனத்தின் ஆழக் குரல்,
ஒரு பக்கம் – பயணிக்கும் சிந்தனையின் பசுமை.
தோன்றாத உணர்வுகள், தொலையாத சுவாசங்கள்,
நூல்களில் இல்லை – ஆனால் வாசிக்கும் மனத்தில் வாழ்ந்தவைகள்.
பளிச்சென்ற கட்டடமல்ல இது,
நாம் கொண்டிருக்கும் நாகரிகத்தின் நீண்ட நிழல்!
வெந்து சிதைந்த பக்கங்களில் கூட,
விழிப்புணர்வின் முளைகள் மலர்ந்தன – விடியலுக்கு முன்பே.
ஒரு நூலகம் என்பது பக்கம் பெயர்த்தல் அல்ல,
அது ஒரு சமூகத்தின் மன ஓவியம்,
தரமான சிந்தனையின் தூண்கள்,
மறந்து போன விடுதலையின் ஓசைகள்.
வாசிப்பு ஒரு மன பயணம் –
நம் விழிகளுக்கு மறைந்து கிடக்கும் உண்மை தேடல்.
யாழ்ப்பாணம், உன்னில் நின்ற நம் நூலகம்,
நம் இனத்தின் உயிரும் ஒளியும் ஒரே நேரத்தில்!
நடராசா கோபிராம்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
உளவியல்சிறப்புக்கலைமாணவன்











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM