ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம் அதன் சிறப்பை உறுதிப்படுத்த முடிந்தது.
அதன்படி, 2025 பிப்ரவரி 07 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜனாதிபதி நிதியத்தின் குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்திய புதிய டிஜிட்டல் அமைப்பு, குடிமக்கள் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், அரச துறையில் சிறந்த பாராட்டு விருதையும் பெற்றது.
இந்த இரட்டை விருதைப் பெறுவதன் மூலம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க ஜனாதிபதி நிதியம் எடுத்த நடவடிக்கைகள் தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக அரச துறையில் சிறந்த பாராட்டு விருதை பெற்றதன் மூலம் ஏனைய அரச நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலின் வெற்றி மற்றும் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM