புற்றுநோய் பாதிப்புகளை நிவாரணம் அளிக்க தற்போது புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சத்திர சிகிச்சை - கதிர்வீச்சு சிகிச்சை- கீமோதெரபி ஆகிய சிகிச்சைகள் பலனளித்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கும் , எம்முடைய உடல் உறுப்புகளின் சிகிச்சை அளிப்பதற்கு கடினமானதாக கருதப்படும் மூளை, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்கும் சிகிச்சை அளிப்பதற்காக தற்போது புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.
புரோட்டான் பீம் தெரபி என்பது ஒரு பிரத்யேக வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை ஆகும். இது புற்றுநோய் மற்றும் சில புற்றுநோய் அல்லாத கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இதன் சக்தி வாய்ந்த ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே புற்றுநோயாளிகளுக்கு எக்ஸ் கதிர்களை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புரோட்டான் பீம் தெரபி என்பது செறிவூட்டப்பட்ட துகள்களில் இருந்து புரோட்டான்கள் எனும் நுண் ஆற்றலை பாவிக்கும் புதிய வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை ஆகும்.
மூளையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புற்றுநோய் ,மார்பக புற்றுநோய், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய், கண், உணவு குழாய், தலை, கழுத்து, கல்லீரல், நுரையீரல், கணையம், பிட்யூற்றரி, புராஸ்டேட், முதுகெலும்பு , மண்டை ஓட்டின் அடிப்பகுதி... ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த புரோட்டான் பீம் தெரபி முழுமையான நிவாரணம் அளிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய புரோட்டான் பீம் தெரபி மூலம் வழங்கப்படும் சிகிச்சையானது தற்போது நடைமுறையில் உள்ள கதிர்வீச்சு சிகிச்சையை விட குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன.
புரோட்டான் கற்றைகளை புற்றுநோய் பாதித்திருக்கும் பகுதியில் வைத்திய நிபுணர்கள் துல்லியமாக நேரிடையாக செலுத்தி அந்த செல்களை அழிக்கிறார்கள்.
மேலும் இத்தகைய சிகிச்சை புற்றுநோயை கட்டுப்படுத்துவதிலும் சிறந்த நிவாரணத்தை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் கௌதமன் தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM