இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் வென்றுள்ளார்.
கிராஸ்னாஹோர்காய் ஹங்கேரியில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரது முதல் நாவல் ‘சாட்டன்டாங்கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியானது. இவர் எழுதிய ‘ஸ்பேட்வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்ரிங் தி மேட்னஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற சிறுகதையும் பிரபலம் அடைந்தது. இவரது படைப்புகள் அனைத்தும் தொலைநோக்கு கொண்டவை. தீவிரவாதம் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இவரது படைப்புகள் கலையின் சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய ஐரோப்பிய பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறந்த இதிகாச எழுத்தாளராக இவர் கருதப்படுகிறார். பிரபல எழுத்தாளர்கள் ஏனஸ்ட் ஹெமிங்கேவ, டோனிமாரிசன் ஆகியோர் அடங்கிய பட்டியலில் லஸ்லோ கிரஸ்னாகோர்காயும் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் இந்த பரிசை வென்றிருந்தார். இதுவரை மொத்தம் 117 முறை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அவ்வப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகின்றார். இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று வெள்ளிக்கிழமை (10) அறிவிக்கப்பட உள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM