குடு சலிந்துவுக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

Published By: Vishnu

09 Oct, 2025 | 10:14 PM
image

பாதாள உலகக்குழு தலைவராக அறியப்படும் பிரபள  போதைப்பொருள் கடத்தல் காரரான சலிந்து மல்ஷிக என்னும் குடு சலிந்துவை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றமை தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.

பாதாள உலகக்குழு தலைவராக அறியப்படும் பிரபள  போதைப்பொருள் கடத்தல் காரரான சலிந்து மல்ஷிக என்னும் குடு சலிந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் பிணை நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால்  நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி வழக்கு விசாரணை வியாழக்கிழமை (9) கொழும்பு நீதவான் அசங்க  எஸ் போதரகம தலைமையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு விளக்கமளித்திருந்த   குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் ஆஜரான விசாரணை அதிகாரிகள், சந்தேகநபர் 2019. 5.19 ஆம் திகதி போலி ஆவணங்களை சமர்ப்பித்து பெறப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றதுடன், 2019.6.5 ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டை பயன்படுத்தியே மீள நாடு திரும்பியிருந்தார்.

அத்தோடு இதேமுறையைில் 2020.10.2 ஆம் திகதி மீள வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று நாடு திரும்பியிருந்தார்.  சந்தேகநபர் படபெதிகே தொன் சந்துன் லக்மால் என்னும் பெயரில் தாயரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டை தயாரித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.  குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் வழங்கிய தகவலுக்கமைய இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர்.

தற்போது சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளதுடன் இது தொடர்பில் சர்வதேச பரஸ்பர ஒத்துழைப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.

அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதவான் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தெரிவித்து பிடியாணை பிறப்பித்திருந்தார். மேலும்  பிணையாளர்களுக்கு அறிவித்தல் அனுப்பி வைப்பதோடு,  இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 15:31:57
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07