கடந்த அரசாங்கங்களை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி - விமல் வீரவன்ச கடும் விசனம்

09 Oct, 2025 | 03:53 PM
image

(எம்.மனோசித்ரா)

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம் முற்றாக மீறப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விட தேசிய மக்கள் சக்தி மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வியாழக்கிழமை (09)  தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொலிஸ்மா அதிபரால் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நியமனம் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அதில் அரசியல் தலையீடுகளும் இடம்பெறக் கூடும் என்பதற்காகவே சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டது. ஆனால் சுயாதீனமானது எனக் கூறப்படும் பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நியமனம் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தையும் அரசியல் தலையீடுகளுக்கமையவே முன்னெடுக்கிறது.

அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதற்கான நோக்கம் முற்றாக மீறப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்தும் செயற்பாடாகும்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னரை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஊடாக பொலிஸ் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43