2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு ஜனவரி 20 ஆரம்பம் - கல்வி அமைச்சு

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மொழிப் பாடசாலைகளிலும் 2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்பு ஜனவரி 20 ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான முதலாம் வகுப்புகள் இலங்கையில் உள்ள அனைத்து சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மொழிப் பாடசாலைகளிலும் 2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.

அரச பாடசாலைகள், அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் பொருந்தும். தரம் 1 மாணவர்களுக்கான சேர்க்கை நடவடிக்கைகளை உத்தியோகபூர்வ வகுப்பு ஆரம்பிக்கும் திகதிக்கு முன்னர் பாடசாலைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

புதிய தரம் 1 மாணவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ விழாவில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும். அதற்கமைய தரம் 2 மாணவர்களால் வரவேற்பு, பெற்றோர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பங்கேற்பு, தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை ஏற்றி, அதனைத் தொடர்ந்து தேசிய மற்றும் பாடசாலை கீதங்களை இசைத்தல், ஆரம்பக் கல்விச் சீர்திருத்தங்களின் நோக்கங்கள் மற்றும் புதிய தரம் 1 பாடத்திட்டம் குறித்து பெற்றோருக்கு ஒரு அறிமுக அமர்வு என்பன அன்றைய தினத்தில் இடம்பெற வேண்டும்.

புதிய மாணவர்களை வரவேற்க ஆரம்பப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்படும் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அது அமைய வேண்டும். இந்த நிகழ்வு புதிய மாணவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியமும் இன்றி சீராகவும் மகிழ்ச்சியாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். நிகழ்வின் வெற்றியை உறுதிசெய்ய, பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் செயற்திறன் மிக்க பங்கேற்பையும் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01