ஓட்டமாவடி - மீராவோடையில் இருட்டுப் பாலம் ; அச்சத்தில் மக்கள்!

09 Oct, 2025 | 01:20 PM
image

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது.

மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக இந்தப் பாலம் இருண்டு கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் அந்த பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் கடந்துசெல்கின்றனர்.

இந்த சிறு பாலம் இருளில் காணப்படுவதால் அங்கு சமூக சீர்கேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தினூடாக பள்ளிவாசலுக்குச் செல்வோரும் ஏனைய தேவைகளுக்காக செல்வோரும் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, இந்த பாலத்தின் மீதும் அதை அண்டிய பகுதியிலும் மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00