ஓட்டமாவடி - மீராவோடையில் இருட்டுப் பாலம் ; அச்சத்தில் மக்கள்!

09 Oct, 2025 | 01:20 PM
image

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது.

மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக இந்தப் பாலம் இருண்டு கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் அந்த பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் கடந்துசெல்கின்றனர்.

இந்த சிறு பாலம் இருளில் காணப்படுவதால் அங்கு சமூக சீர்கேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தினூடாக பள்ளிவாசலுக்குச் செல்வோரும் ஏனைய தேவைகளுக்காக செல்வோரும் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, இந்த பாலத்தின் மீதும் அதை அண்டிய பகுதியிலும் மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54