குருணாகலில் மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெண்டவல பகுதியில் காணியொன்றில் இருந்து கடந்த 7ஆம் திகதி பிற்பகல் வயோதிபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மெல்சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் அருகில் இருந்து ஒரு பணப்பையும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் மூலம் உயிரிழந்த வயோதிபர் 64 வயதுடைய திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
வயோதிபர் கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி முதல் காணாமல்போனதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நீதவான் பரிசோதனையின் பின்னர், சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது,
மெல்சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM