மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் குருண மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி வீதியில் விழுந்து கிடந்த முதியவர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களிடம் உதவி கோரி உயிரிழந்த முதியவரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள முதியவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் சீதுவை பொலிஸ் நிலையத்தின் 071 - 8591637 அல்லது 011 - 2253524 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM