(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது.
தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார்.
அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.
பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM