தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதும் உலகின் அதிவேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று நம்புகிறேன்.
எனது குழந்தைகள் 20 வயதை எட்டும் போது, இப்போதும் நான் உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று அவர்களிடம் பெருமையோடு கூற விரும்புகிறேன் என்றார். ஊக்கமருந்து பயன்படுத்துவோரை எந்த காரணத்தை கொண்டும் போட்டிகளில் அனுமதிக்கக்கூடாது. இல்லாவிட்டால் விளையாட்டே மடிந்து போய் விடும் என்றும் அவர் கூறினார்.
ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றவரான 30 வயதான உசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டத்திலும் (9.58 வினாடி), 200 மீட்டர் ஓட்டத்திலும் (19.19 வினாடி) உலக சாதனையாளராக வலம் வருகிறார்.
லண்டனில் இன்று தொடங்கும் உலக தடகள போட்டியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளார். இதில் அவரது 100 மீற்றர் ஓட்டப்பந்தயம் நாளை 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM