உலகளாவிய ரீதியில் கண் பார்வையற்றவர்கள் தொகை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் 3 மடங்காக அதிகரிக்கவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ருபேர்ட் போர்னி தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வின் முடிவுகள் லான்செட் குளோபல் ஹெல்த் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
சிறந்த நிதி வசதி மூலம் சிகிச்சைகள் மேம்படுத்தப்படாவிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள் கண்பார்வை இழந்தவர்கள் தொகை 36 மில்லியனிலிருந்து 115 மில்லியனாக அதிகரிக்கும் அபாயமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வயதானவர்களது சனத்தொகை அதிகரிப்பதே மேற்படி பிரச்சினைக்குக் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
உலகில் கண்பார்வைக் குறைபாடுள்ளவர்களது சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள போதும் உலக சனத்தொகை வளர்ச்சியுடன் வயதானவர்கள் தொகை அதிகரிப்பது பார்வை இழந்தவர்கள் தொகை அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்வதாகவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வானது 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 மில்லியன் பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. குருட்டுத் தன்மை ஒருவரது சுதந்திரத்தை குறைப்பதுடன் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளையும் வரையறுப்பதாகவுள்ளது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள், பார்வைக் குறைபாட்டால் தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அத்துடன் ஆபிரிக்காவின் சில பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் பார்வைக் குறைபாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கண்புரை நோய்க்கான அறுவைச் சிகிச்சை மற்றும் பார்வையைச் சீர்செய்யும் வகையிலான சரியான மூக்குக் கண்ணாடிகள் என்பவற்றை பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொள்வதை உறுதி செய்ய அவற்றில் அதிகளவில் முதலீட்டை மேற்கொள்ள ஆய்வாளர்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM