பரீட்சை நடைபெறும் நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Published By: Raam

04 Aug, 2017 | 11:42 AM
image

கல்வி பொதுத்தரா­தர உயர்­தர பரீட்­சையும் புல­மைப்­ப­ரிசில்  பரீட்­சையும் இடம்­பெறும் பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் விசேட டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்டம் தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நாடு முழு­வ­திலும் இம்­முறை கல்வி பொதுத்தரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்சை எதிர்­வரும் 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 2 ஆம் திகதிவரை 2230 பரீட்சை நிலை­யங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

அத்­துடன் தரம் 5 ஆம் ஆண்­டுக்­கான புல­மைப்­ப­ரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மூவா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட பரீட்சை நிலை­யங்­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லையில் குறித்த பரீட்சை நிலை­யங்­களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­ட­மொன்று இந்­த­ வாரம் முதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில்  பரீட்சை நிலை­யங்­களில் புகை விசு­றுதல், டெங்கு நுளம்பு பர­வக்­கூ­டிய வகையில் காணப்­படும் சூழலை மாற்­றி­ய­மைத்தல் முத­லான பாது­காப்பு நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்­கு­மாறு சுகா­தார அமைச்­சுக்கு பரீட்­சைகள் திணைக்­களம் அறிக்­கையின் மூலம் அறி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்­ந­ட­வ­டிக்­கைகளை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை பரீட்சை நடை­பெறும் தினங்­களில் நுளம்­பு­க­ளி­லி­ருந்து பிள்­ளை­களை பாது­காக்க நுளம்­புக்­கடி தடுப்பு பூச்­சுக்­களை பூசி அனுப்­பு­மாறும் பரீட்­சைகள் திணைக்­களம் பெற்­றோ­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57