சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த வர்த்தகர் ஒருவர் வேன் ஒன்றில் தனது வீடு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து பணம், நகை மற்றும் பொருட்கள் ஆயுதம் தரித்த குழுவொன்றினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள தளுவகொட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு கொச்சிக்கடை, லுர்து மாவத்தையைச் சேர்ந்த தங்கராஜா விக்னராஜ் என்பவரிடமே தளுவகொட்டுவை பிரதேசத்தில் வைத்து முகத்தை மூடியபடி வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட ஆயுதம் தரித்த குழுவினரால் பணம், நகை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
12 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், 8 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் 48 ஆயிரம் ரூபா பணம், 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM