ஐ.தே.க. ஆதரவுடன் வெற்றி பெறுவோம் ; கூட்டு எதிரணி சூளுரை

Published By: Raam

04 Aug, 2017 | 11:53 AM
image

வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராகக் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ளனர். அவர்கள்  அது தொடர்பில் எம்­மிடம் தனிப்­பட்ட முறையில் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர் என்று  கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தார்.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி நேற்று பாரா­ளு­மன்ற பிரதி செய­லாளர் நாய­கத்­திடம் நேற்று  கைய­ளித்­துள்­ளது. பிரே­ர­ணையை  கைய­ளித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­ய­ளிக்கும் என நம்­பு­கிறோம். எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  வாக்­கெ­டுப்­புக்கு செல்ல முன்னர் கெள­ர­வ­மான முறையில் இரா­ஜி­னாமா  செய்ய வேண்டும். அல்­லா­து­போனால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யூ­டாக அவர் பதவி விலக வேண்­டி­வரும்.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்­ளது. அப்­போது அது தொடர்பில் எவரும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எனினும் தற்­போது ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணையின் பின்னர் மத்­திய வங்கி பிணை முறியில் இடம்­பெற்­றுள்ள மோசடி தொடர்பில் அனை­வரும் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

எனவே கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 97 பேரும் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் எனக்­கேட்டுக் கொள்­கிறோம். மேலும் அவ­ருக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ள­தாக ஏற்­க­னவே தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் அதிகளவான அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09