அம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவு, வாடிகல, ரன்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) ஒரு ஆணும் பெண்ணும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
ஹுங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM