“ குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டால் சிறைச்­சாலை செல்ல நேரிடும்”

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 11:26 AM
image

வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தொடர்பில் தேசிய அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு கருத்து தெரி­விக்க முடி­யாது. எமது கட்­சியின் ஊழல் மோசடி குற்­றச்­சாட்­டுகள் குறித்து நாம் விவா­திக்க முடியும்.  எதிர்­வீட்டு பிரச்­சி­னையில்  நாம் எவ்­வாறு தலை­யி­டு­வது என அமைச்சர் பைசர் முஸ்­தபா கேள்வி எழுப்­பினார். 

இந்த அர­சாங்­கத்தில் மாத்­தி­ர­மல்ல சகல அர­சாங்­கத்­திலும் திரு­டர்கள்  இருந்­தனர் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 அவர் மேலும் கூறு­கையில், 

மத்­திய வங்கி பிணை­மு­றிகள் குறித்த ஊழல் விட­யத்தில் உரிய நபர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகவே இந்த விட­யத்தில் நாம் எவர் தொடர்­பிலும் கருத்து தெரி­விக்க முடி­யாது. அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற நிலையில் அவர் குறித்து எம்மால் எந்தக் கருத்­தையும் முன்­வைக்க முடி­யாது. 

எமது கட்­சிக்குள் ஏதேனும் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்ற முறைப்­பா­டுகள் கிடைத்­தாலோ அல்­லது ஊழல் குற்­றத்தில் எமது கட்சி உறுப்­பி­னர்கள் எவரும் சிக்­கிக்­கொண்­டுள்­ளனர் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டாலோ அது தொடர்பில் கருத்து தெரி­விக்க எமக்கு உரிமை உள்­ளது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின்  விட­யங்­களை அவர்கள் கையாள வேண்டும். இதில் எமது கருத்­துக்கள் அர்த்­த­மற்­றவை. எமது வீட்டில் ஏதேனும் பிரச்­சி­னைகள் இருப்பின் அது குறித்து நாம் தலை­யிட முடியும். எதிர்­வீட்டு பிரச்­சி­னைக்கு நாம் எவ்­வாறு தலை­யி­டு­வது?  

அதேபோல் திரு­டர்கள் , ஊழல் வாதிகள் இந்த அர­சாங்­கத்தில் மாத்­திரம் அல்ல சகல அர­சாங்­கத்­திலும் உள்­ளனர். முன்­னைய ஆட்­சி­களின் போதும்  திரு­டர்கள்  ஊழல் வாதிகள் நிறைந்து இருந்­தனர். இவர்கள் சர்­வா­தி­கா­ர­மாக செயற்­பட்டு ஊழல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டனர். ஆகவே அர­சாங்­கத்தில் திரு­டர்கள் உள்­ளனர் என்­பது வழ­மை­யான விட­ய­மாகும். ஆனால் இந்த அர­சாங்­கத்தில் ஊழல் குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணை­களை சுயா­தீ­ன­மாக முன்­னெ­டுக்­க­பட்டு வரு­கின்­ற­னது. குற்றம் நிருபிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்காக சிறைச்சாலைகள் காத்துக்கொண்டுள்ளன. யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாக இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49