நல்லூர் முத்து உள்­ளிட்ட இருவர் கைது 'விக்­டரை' கைது செய்ய 6 குழுக்கள்

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 11:03 AM
image

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில்  முறைப்­பாடு  ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் முத்து  உள்­ளிட்ட இரு­வரை நேற்று பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

ஏற்­க­னவே மது உள்­ளிட்ட இரு­வரைக் கைது செய்து 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான சிறப்புக் குழு இவ்­விரு சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்­தது. 

 பொலிஸார் மீதான தாக்­குதல் குறித்து கைது செய்­யப்­பட்­டோரின் எண்­ணிக்கை தற்­போது நான்­காக உயர்ந்­துள்­ள­தும. புதி­தாக கைதான இரு­வரும் 18 வயது நிரம்­பி­ய­வர்கள் என குறிப்­பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர, அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும், தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய வாள்கள், மோட்டார் சைக்­கிள்­களை கைப்­பற்ற சிறப்பு விசா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே இந்த வாள்­வெட்டு சம்­ப­வங்கள் தொடர்பில் பிர­தான சந்­தேக நப­ராக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள முன்னாள் விடு­தலைப் புலி உறுப்­பி­னரும் ஆவா பாதாள உலகக் குழு உறுப்­பி­ன­ரு­மான விக்­டரை கைது செய்ய சிறப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­ணான்­டோவின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழ். பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஹேவா­வித்­தான தலை­மையில் 6 பொலிஸ் குழுக்­களே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

கடந்த ஜூலை 30 ஆம் திகதி கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு சென்ற தம்­மிக, சுரேஷ் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் வாள்­வெட்­டுக்கு உள்­ளாகி இருந்­தனர்.  

முதலில் நல்லூர் சத்­தி­யா­னந்­தன வீதியைச் சேர்ந்த 20 வய­து­டைய மதூ எனப்­படும் சிவ­ராஷா மதுஷன் மற்றும் 23 வய­து­டைய மானிப்பாய் பகு­தியைச் சேர்ந்த விஜ­ய­ரத்னம் சிவராஜ் ஆகி­யோரை கடந்த முதலாம் திகதி பொலிஸார் கைது செய்­தனர். 

அவர்­க­ளி­ட­மி­ருந்து கொலை முயற்­சிக்கு பயன்­ப­டுத்­திய ஒரு மோட்டார் சைக்­கி­ளையும் பொலிஸார் கைப்­பற்­றினர். இத­னை­ய­டுத்தே நேற்று 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து  என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­சையும் பொலிஸார் கைது செய்­தனர். 

கைதா­ன­வர்­க­ளிடம் தொடர் விசா­ரணை இடம்­பெறும் நிலையில் இன்று அவர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் 7 மோட்டார் சைக்­கிளில் வந்­துள்­ள­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் ஊடாக கண்­ட­றிந்­துள்ள பொலிஸார் ஒவ்­வொரு மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் 2 அல்­லது மூன்று பேர் இருந்­துள்­ளதை சாட்­சிகள் ஊடாக வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். 

அதன்­படி குறைந்த பட்சம் 15 பேர் கொண்ட குழு இந்த தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்கும் பொலிஸார் அனை­வ­ரையும் சட்­டத்தின் பிடிக்குள் கொண்­டு­வர விஷேட திட்டம் ஒன்­றினை வகுத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். 

 ஏனைய சந்­தேக நபர்­களை சட்டத்தின் பிடியில் கொண்டுவர பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக  விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு படைப் பிரிவொன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57