2025ம் ஆண்டிற்கான பெறுமதி வாய்ந்த வணிக விருந்தினை வென்றுள்ளது தாய் சுமேத

07 Oct, 2025 | 12:28 PM
image

இலங்கையின் முன்னணி ஊதுபத்தி உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தரான தாய் சுமேத என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் மீண்டும் ஒரு முறை சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.

BWIO ( USA- =yq;fh) சபையினால்  மிக பரந்தளவிலான பிரிவில் வழங்கப்பட்ட 2025ஆம்  ஆண்டிற்கான பெருமைமிகு வணிக விருதினை பெற்றுக்கொண்டது. 

இந்நிறுவனத்தின் சார்பாக இவ்விருதினை  பெற்றுக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் தாய் சுமேதா என்டர்பிரைஸ்சின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  சுமேத எல்பிடிய    கடந்த பல ஆண்டுகளாக தாய் சுமேத இவ்வகையான பல பாராட்டுகளை பெற்றுள்ளதோடு இத்துறையில் தனது தலைமைதுவத்தை மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றது.

இலங்கை பொருளாதாரத்தின் உந்துசக்தியாக இருக்கும் தாய் சுமேத பின்வரும் விடங்களுக்கு பங்களித்து வருகின்றது.

  • உள்நாட்டு சமூகங்களுக்கிடையில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
  • குறிப்பாக சந்தையினை அபிவிருத்தி செய்யும் வகையில் சர்வதேச ரீதியில் உயர் தரத்திலான பொருட்களை ஏற்றுமதி செய்தல்
  • நாட்டிற்கு தேவைப்படும் பொருளாதாரத்திற்கான அந்நிய செலாவணியை அதிகரித்தல்

இலங்கை சோசலிஸ குடியரசின் முன்னால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு விருதினை வழங்கினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right