ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நேரடி முதலீடு : மத்திய வங்கியின் ஆளுனர் 

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 06:10 AM
image

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து நேரடியபக வெளிநாட்டு முதலீடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு கிடைப்பதாகவும் அதுமட்டுமல்லாது நாட்டிற்கு மேலும் நேரடி  முதலீடாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

 

2017 ஆம் ஆண்டின் ஐந்தாவது நிதிக் கொள்கை தொடர்பாக கோட்டை, இலங்கை மத்திய வங்கியன் ஆளுநர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தபோதே மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த்தின் மூலம் 40 கோடி அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இவ்வாண்டில் 670 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும். 

வறட்சியினால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் பணவீக்கம் மேலும் குறைவடையும். 

 

ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது. 

இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

 

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இவ்வருடத்தில் இதுவரை பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளானர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49