வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள்.
வவுனியா, நெடுங்கேணி பொலிசார் ஊடாக குறித்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (06.10) வழங்கப்பட்டன.
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் அவர்களும் செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக எதிர்வரும் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே குறித்த இருவரையும் வருகை தருமாறு அழைப்பாணை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM