கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
இவ்வாறு கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளினால் தொடர்ந்தும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அத்துடன், காட்டாக்காலி கால்நடைகள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, ஆடு, மாடு வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளை வீதிகளில் விடாமல் தங்களுடைய வீடுகளில் வளர்க்குமாறும் அல்லது மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்பி அதனை பராமரிக்குமாறும் தவிசாளர் வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்த அறிவுறுத்தலை மீறி கால்நடைகளை வீதிகளில் விடும் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM