மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அபேசிங்காராம வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 22 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (04) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது, கடந்த செப்டம்பர் 06ஆம் திகதி மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில், துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM