மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இறுதி முடிவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கான பொது ஆலோசனை செயன்முறை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 08ஆம் திகதி மேல் மாகாண ஆலோசனையின் இறுதி அமர்வு நடைபெற்றதன் பின்னர், கட்டணங்களைத் திருத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத் திருத்தத்தில் மின்சாரச் சட்டம் மற்றும் மின்சாரக் கட்டண விலை சூத்திரம் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2025 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை ஆயிரத்து 769 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை பதிவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனை சரி செய்ய 6.8 சதவீத மின்சார கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM