வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற இரண்டு பிள்ளைகனின் தந்தை தீயில் கருகி உயிரிழப்பு!

04 Oct, 2025 | 11:34 AM
image

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, வராஹேன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகனின் தந்தை ஒருவர் தனது வயலில் வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற போது தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹிங்குரக்கொட, போகஸ் சந்தியில் வசித்த இரண்டு பிள்ளைகனின் தந்தை ஆவார்.

இவர் வைக்கோலுக்குத் தீ வைப்பதற்காக தனது வயலுக்கு நேற்று சென்றுள்ளார். பின்னர் இவர் வைக்கோலுக்குத் தீ வைத்த போது அப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டு அந்த இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09