இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொரனரி எனப்படும் இதய ரத்த நாள பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இவர்களுக்கு தற்போதுள்ள வைத்திய நடைமுறையில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையின் காரணமாக பக்க விளைவு ஏற்படுமோ...!? என்ற அச்சம் நோயாளிகளின் மனதில் உள்ளது. இந்நிலையில் இத்தகைய பாதிப்பின் போது மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையில் எண்டாஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்ட்டிங் எனப்படும் புதிய தொழில்நுட்ப முறை பாவிக்கப்படுவதால்... நோயாளிகளுக்கு பலன் விரைவாக கிடைத்து வருவதாக வைத்தியர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக வைத்தியர்கள் விளக்கம் அளிக்கையில்..'' கொரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் இதயத்திலா மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையின் காரணமாக.. சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் பலரும் இதன் பக்க விளைவு குறித்து அச்சமடைகிறார்கள். இதன் போது நோயாளிகளின் கால்பகுதியில் உள்ள ரத்த நாளங்களை வெட்டி அகற்றி இதய ரத்த நாளங்களுடன் பொருத்தப்படுவதால்... நோயாளிகளுக்கு நடப்பதில் அசௌகரியங்கள் ஏற்படும் என்றும், கால் பகுதியில் வலி உண்டாகிறது என்றும் குறிப்பிடுவார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சை முறையில் தற்போது எண்டோஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்டிங் எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய வைத்திய நடைமுறையின் போது கால் பகுதியில் உள்ள ரத்த குழாய்களை நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் எடுத்து அதனை இதயத்தில் பொருத்துவார்கள். இதன் காரணமாக கால் பகுதியில் இருந்து அகற்றப்படும் ரத்த நாளங்கள் பாதுகாப்புடன்... பக்க விளைவு ஏதும் இல்லாமல்... இதயத்தில் பொருத்தப்படுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு காலில் வலி ஏற்படுவதில்லை. அப்பகுதியில் தொற்று பாதிப்பும் உண்டாவதில்லை. சத்திர சிகிச்சைக்கு பிறகு உடனடியாக அவர்களால் நடக்கவும் முடிகிறது. இத்தகைய பலன்களை வழங்குவதால் எண்டாஸ்கோபிக் வெயின் ஹார்வெஸ்டிங் எனும் நவீன தொழில்நுட்பம் நோயாளிகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது '' என்றனர்
வைத்தியர் முத்துக்குமரன்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM