நவராத்திரி – ஒன்பது இரவுகள், ஒன்பது உணர்வுகள்
பண்டைய புராணக் கதைகள் சொன்னது –
மகிஷாசுரனை வீழ்த்திய தேவியின் வீரக் கதை,
அதில் மறைந்தது ஒரு உளவியல் சிந்தனை –
அகந்தை அழிந்தால் மட்டுமே அறிவு மலரும்!
வரலாறாக நிற்கும் திருவிழா,
விழிப்புணர்வை விதைக்கும் சின்னமாகும்;
பெண்ணின் சக்தி, தாயின் கருணை,
சமூகத்தில் சமநீதி பேசும் தாளமிது.
ஒன்பது நாட்கள் – ஒன்பது நிறங்கள்,
ஒவ்வொரு நிறமும் மனதின் ஓர் நிலை;
சிவப்பு வீரத்தைக் குறிக்கும்,
வெள்ளை அமைதியை வளர்க்கும் –
உளவியல் ஆய்வில் இது சிகிச்சைதான்,
நிறங்களால் மனம் மாற்றமடைதல்!
கோலுகள், கலைகள், கதைப்பாடல்கள் –
படைப்பாற்றல் பறக்கும் மேடையிது;
பொம்மலாட்டத்தில் பேசும் சமூகச் செய்தி,
சிறுவர் மனதில் விழும் விதைகள் அறிவு.
ஆராய்ச்சிகள் சொல்கின்றன –
கூட்டு வழிபாடு மனஅழுத்தம் குறைக்கும்,
இசை, நடனம், நிறங்கள் மனநலனைக் கூட்டும்,
இதில் தான் நவராத்திரியின் தரமான சான்று!
புராணங்களில் நம்பிக்கைகள் விதைக்க,
சமூகத்தில் புதிய நம்பிக்கை மலர்கிறது;
இன்று பெண்கள் கல்வியால் எழுந்திட,
தேவியின் சக்தி உயிர்த்தெழும் கதையாகிறது.
நவராத்திரி ஒரு விழா மட்டும் அல்ல –
உள் போராட்டங்களின் மனவியல் கற்றல்;
சிந்தனை, சமூக ஒற்றுமை, படைப்பாற்றல்,
அனைத்தையும் இணைக்கும் ஒளிவிழா.
ஒன்பது இரவுகள் முடிந்தபின் உதயம் –
நம்பிக்கையின் புது காலையிது;
அறிவு, அன்பு, அமைதி சேர்ந்து –
மனித சமுதாயம் உயரும் பாதையிது.
- நடராசா கோபிராம்,
உளவியல் சிறப்புக் கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM