கருத்து வெளியிடும் சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த கூடாது - போலியான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு

02 Oct, 2025 | 05:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நியாயத்தை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கான தடையாகவும், அல்லது ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் காணப்படும் அபிசாலைகளையும் பலவீனப்படுத்துவதற்கு முறைகேடாக பயன்படுத்தக் கூடாது. ஆணைக்குழுவை தொடர்புப்படுத்தி குறிப்பிடப்படும் போலியான கருத்துக்கள் மற்றும் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பின்வாங்க போவதில்லை என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல்வேறுப்பட்ட குறுகிய நோக்கங்களுடன் செயற்படும் ஒருசிலர் மற்றும் நிறுவன்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு பற்றி அடிப்படையற்ற மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கருத்துக்களை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் குறிப்பிடுவதையிட்டு கவலையடைகிறோம்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் ஆணைக்குழுவின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், ஆணைக்குழுவின் சுயாதீனம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாடு ஏற்டுபடும்.

ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகார சுயாதீனத்தன்மை மற்றும் அச்சமின்றி அல்லது பக்கச்சார்பின்றி செயற்படுவதற்கு 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் ஏனைய அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாக தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மீண்டும் குறிப்பிட்டுக்கொள்கிறோம்

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்து வெளியிடும் சுதந்திரத்தை நியாயத்தை நிலைநாட்டும் செயற்பாட்டுக்கான தடையாகவும், அல்லது ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் காணப்படும் அபிசாலைகளையும் பலவீனப்படுத்துவதற்கு முறைகேடாக பயன்படுத்தக் கூடாது.

அதற்கமைய ஆணைக்குழு தொடர்பில் தவறான விடயங்களை குறிப்பிடுதல் அல்லது ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர் அல்லது நிறுவனம் தொடர்பில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் மற்றும் உரிய ஏனைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவசியமான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆணைக்குழு பின்வாங்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01