மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

02 Oct, 2025 | 03:10 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன என பராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக கரையோர கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலமையில் ஆரையம்பதி கடற்கரையில் புதன்கிழமை (01) அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பெற்றது.

மண்முனைப்பற்று உதவிப் பிரதேசெயலாளர் பார்த்தீபன், நட்புக்கு உயிர்கொடுப்போம் எனும் அமைப்பின் ரா.யோகேஷ்குமார்,  மண்முனைப்பற்று பிரதேசசபையின் உதவித்தவிசாளர் மற்றும், பிரதேசசபையின் செயலாளர் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. அதுபோல் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக தற்போது நாங்கள் 9 ஆயிரம் மில்லியனுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

மக்களின் நீண்டகாலத் தேவையாகக் கருதுகின்ற வேலைத்திட்டங்களுக்கே நாம் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

அதுபோல் வருகின்ற வருடத்திலும் பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நாங்கள் தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கின்றோம். என இதன்போது  தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02