எம்மில் சிலர் இரவு நேர உறக்கத்தின் போது குறட்டை விட்டு தூங்குவார்கள். இவர்களை 'ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்கிறார். அதனால் மகிழ்ச்சியானவர் 'என பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் பலரும் குறட்டை விட்டு தூங்குவது ஒரு நோய் தான் என குறிப்பிடுகிறார்கள். இவற்றில் எது உண்மை? என்று குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான விளக்கத்தை வைத்தியர்கள் பின்வருமாறு வழங்குகிறார்கள்.
உடல் உழைப்பை நாளாந்தம் மேற்கொற்பவர்கள் இரவில் உறங்கும் போது சீரான மற்றும் சிறிய அளவிலான ஒலியுடன் கூடிய குறட்டை விட்டு உறங்குவார்கள். இவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வது உண்மை தான்.

இவர்களுடைய குறட்டை நோயல்ல என குறிப்பிடலாம். ஆனால் குறட்டை சில நோய் பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதனால் குறட்டை விட்டாலே...! அது ஆபத்து தான் என அச்சப்பட வேண்டியதில்லை.
நீங்கள் குறட்டை விட்டு தூங்கினாலும் குறட்டை விடாமல் தூங்கினாலும் ஆரோக்கியமாக உறங்கினால் எந்த தொந்தரவும் இல்லை.
ஆனால் காலையில் எழுந்ததும் உற்சாகம் இல்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்தாலோ அல்லது சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தாலோ அல்லது நினைவுத்திறனில் பாதிப்பு குறைபாடு ஏற்பட்டாலோ அன்றைய பொழுது முழுவதும் பகலில் உறங்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ அப்போது அவர்கள் இரவில் விடும் குறட்டை அவர்களுக்கு நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என அவதானிக்கலாம்.
அதே தருணத்தில் குறட்டை அருகில் உறங்கி இருக்கும் நபர்களுக்கு அசௌகரியமாகவும், சங்கடமாகவும் மாறினால் அதுவும் நோயின் அறிகுறி தான். இதுபோன்ற வகைப்படுத்தப்படும் குறட்டைகளுக்கு அவசியம் சிகிச்சை பெற வேண்டும்.
வைத்தியர் ராமகிருஷ்ணன்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM