சிறுவர்களின் கனவு!

01 Oct, 2025 | 11:38 AM
image

உலக சிறுவர் தினம் 

சிறு இதயம் சூரியன் போல,

சிரிப்பால் உலகை சூடாக்கும்.

மழைத்துளி போல் தூய்மையானது,

சிறுவர் மனம் – மனவியல் அற்புதம்.

ஆர்வம் கொண்ட கண்கள் வழியாக,

அறிவின் விதை முளைக்கிறது.

விளையாட்டில் கற்ற பாடம்,

வாழ்க்கையை வழிநடத்துகிறது.

 உலக சிறுவர் தினம்

சொல்லும் செய்தி ஒன்றே –

"குழந்தை சிந்தை காக்கும் பணி,

ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு!"

அவர்களின் உரிமை சுருங்கக் கூடாது,

அன்பும் பாதுகாப்பும் குறையக் கூடாது.

மனநலன் மலர வழி செய்யும்,

கவனமும் பரிவும் அவசியம்.

பசி, பயம், போர், வன்முறை –

இவைகள் தொலைந்த உலகம்தான் வேண்டும்.

அமைதி, சமத்துவம், கல்வி –

இவைகள் நிறைந்த உலகம் தான் சிறுவர்களின் கனவு.

அவர்கள் சிந்தையில் ஒளிரும் கனவுகள்,

நாளைய நாளை மாற்றும் சக்தி.

நாம் விதைக்கும் நம்பிக்கையின் விதை,

அவர்களின் சிரிப்பில் மலர்கிறது.

 உலக சிறுவர் தினம் –

அன்பின் மொழி, நம்பிக்கையின் ஒளி,

சமூக நீதி, சமத்துவத்தின் குரல் –

சிறுவர் சிரிப்பால் நிறைந்த நம் எதிர்காலம்

- நடராசா கோபிராம்,

உளவியல் சிறப்புக் கலை மாணவன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right