அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் - ரவி கருணாநாயக்க

28 Sep, 2025 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)

தலைமைத்துவம், சின்னம் என வெ வ்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு இனியும் பிளவுகளை நோக்கி பயணிக்க கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதுவே எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் அபிலாஷையாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே மக்களின் அபிலாஷையாகவுள்ளது. இது வசனங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. எனவே இதனை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது மாத்திரமின்றி அதிலிருந்து எவ்வாறு முன்னோக்கிப் பயணிப்பது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

தலைமைத்துவம், சின்னம் என வெ வ்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு இனியும் பிளவுகளை நோக்கி பயணிக்க கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய மக்கள் சக்தி என்பது இருவேறு கட்சிகள் அல்ல. இவையிரண்டும் ஒரே கட்சிகளாகும். அதனை நிறைவேற்றுவதற்காக நானும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

கட்சி தலைவர்கள் இதனை ஏற்றுக் கொள்வதைப் போன்றே ஏனையோரும் அதற்கு இணங்க வேண்டும். இன்று அரசியல் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. பெரிய கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. பரந்துபட்ட கூட்டணியின் ஊடாக அனைவரும் இணைந்து பயணித்தால் இந்த பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காண முடியும். தற்போது ஜே.வி.பி.யினரின் சொத்து விபரங்களைப் பார்க்கும் போது 77 ஆண்டு திறந்த பொருளாதாரத்தின் பலனை நேரடியாகக் காண முடிகிறது.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவுள்ளவர்கள் தம்மிடம் ஒரு சதம் கூட இல்லை என எதற்காக பொய் கூற வேண்டும்? உண்மையில் ஆளுங்கட்சியின் சொத்து விபரங்களால் எதிர்க்கட்சிகள் கோபமடையவில்லை. மாறாக மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 15:19:50
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31
news-image

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு...

2025-12-17 11:39:03