காணி­களை தொடர்ந்து விடு­விப்­ப­தா­னது நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் : பிரித்­தா­னியா

Published By: Priyatharshan

02 Aug, 2017 | 01:01 PM
image

பொது­மக்­களின் காணி­களை தொடர்ந்து  இரா­ணு­வத்­தினர் விடு­விப்­பதன் மூலமே சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தாக இருக்கும் என்று பிரித்­தா­னியா  தெரி­வித்­துள்­ளது. 

குறிப்­பாக யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான  நல்­லி­ணக்க செயற்­பா­டுகள்   முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.   இரா­ணு­வத்­தினர்  பொது­மக்­களின் காணி­களை  விடு­வித்து வரு­வதை வர­வேற்­கின்றோம் என்றும்  கொழும்­பி­லுள்ள  பிரித்­தா­னிய  உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும்   தெரி­வித்­துள்­ள­தா­வது,

பொது­மக்­களின் காணி­களை விடு­விக்கும் செயற்­பா­டு­களை  இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இது பாராட்­டப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.  இந்­நி­லையில் தொடர்ந்தும்  பொது­மக்­களின் காணி­களை  விடு­விப்­ப­தற்கு   நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு காணி­களை விடு­விப்­பதன் மூலமே  சமூ­கங்­க­ளுக்­கி­டையில்  நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு  பங்­க­ளிப்பு செய்ய முடியும்.  உண்மை மற்றும் பொறுப்­புக்­கூறல்  செயற்­பா­டு­க­ளா­னது  தேசிய  மற்றும்  இரா­ணுவ  நிலை­களில் இடம்­பெ­று­வது முக்­கி­ய­மாகும். இது  நவீன இரா­ணுவ  கட்­ட­மைப்­புக்கு  அவ­சி­ய­மா­ன­தாகும்.  

உண்­மையைக் கண்­ட­றிதல் மற்றும் பொறுப்­புக்­கூ­றுதல்,  நல்­லி­ணக்­கத்­திற்கும் சிறந்த எதிர்­கா­லத்­திற்கும் உயர்ந்­த­ரக பங்­க­ளிப்பை செய்­வ­தாக இருக்கும்.  இது பரந்­து­பட்ட தேசிய மட்­டத்தில்  அக்­கறை கொண்­ட­தாக இருக்­க­வேண்டும்.

உண்மை மற்றும் பொறுப்­புக்­கூறல்  என்­பன சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­கின்­றன. அத்­துடன் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பொது­மக்­க­ளுக்­கி­டை­யிலும்  இவை நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும். இரா­ணு­வத்­திற்குள் இவ்­வாறு பொறுப்­புக்­கூறல் இடம்­பெ­று­வ­தா­னது நம்­பகத் தன்­மையை அதி­க­ரிக்­கின்­றது. விழு­மி­யங்­க­ளையும் மதிப்புக்களையும் பலப்படுத்துகின்றது. 

2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையும் பிரித்தானியாவும் பாதுகாப்பு  தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்  பாதுகாப்பு தொடர்பான நிபுணர் ஒருவரை யும் நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு...

2025-01-18 00:26:54
news-image

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சித்த அனைத்தையும்...

2025-01-17 16:15:00
news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05