திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமூகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால்... சமூக உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பிள்ளைகள் எத்தனை? என்று கேட்பது கடமையாகி விட்டது.
இதற்கு திருமணமான தம்பதிகள் சரியான பதிலை அளிக்க வேண்டுமா? அல்லது சூழலுக்கேற்ற பதிலை வழங்க வேண்டுமா? என்பதை கேட்பவர்களை பொறுத்து பதிலளிக்கிறார்கள்.
இருப்பினும் அவர்களுடைய மனதில் பெற்றோர்களாக வேண்டும் என்ற தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகிறது என்றால்... அதற்காக கவலைப்படாமல் பிரத்யேகமான வழிபாட்டினை மேற்கொண்டால்.. புத்திர பாக்கியம் கிட்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் குழந்தை பாக்கியம் கிட்டாத தம்பதிகள் நாளாந்தம் மதிய உணவாக தயிர் சாதத்தை பசியாற வேண்டும். அதே தருணத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் மதிய வேளையில் யாரேனும் மூன்று நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக வழங்க வேண்டும். இதனை தொடர்ந்து கடைப்பிடித்தால் சூட்சம நிலையில் மாற்றம் ஏற்பட்டு... புத்திர பாக்கியம் உண்டாகும்.
இதனை பின்பற்றுவதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால்... ஆதரவற்ற முதியவர்கள் இருக்கும் காப்பகம் அல்லது கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் காப்பகம் ஆகியவற்றுக்கு சென்று... அங்குள்ளவர்களுக்கு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள்- ஒரு வேளை உணவை வழங்கி, அவர்களுக்கு வஸ்திர தானத்தை முடிந்த அளவிற்கு செய்திட வேண்டும். இதனை செயல்படுத்துவதில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்றால்... இது போன்ற இடங்களில் தென்னம்பிள்ளையை பதியமிட்டு பேணி, பராமரித்து வந்தால்.... உங்களது புத்திர பாக்கிய கனவு நனவாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM