வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என அடையாளம்!

27 Sep, 2025 | 12:28 PM
image

வத்தளை, எலகந்த பகுதியில் கடந்த திங்கட்கிழமை (22)  ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , நாடு முழுவதும் பதிவான பல கொள்ளை மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வத்தளை பொலிஸ் பிரிவின் எலகந்த பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, களனி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவால் கடந்த திங்கட்கிழமை (22)  வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் வடக்கு முல்லேரியாவைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 10.2 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் இந்த போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடந்த  செவ்வாய்க்கிழமை (23) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 

இதன்படி , பொலிஸார மேற்கொண்ட மேலும் விசாரணையில், இந்த சந்தேக நபர் பல்வேறு பகுதிகளில் ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர் என்பதும், கடத்தல்காரர்கள்  தற்போது  வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியில் ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்தல்,  2025 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி கந்தானையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07ஆம் திகதி வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு,  2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 06, ஆம் திகதி நீர்கொழும்பில் ஒரு வீட்டின் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு, வெளிநாட்டில் வசிக்கும் மூன்று பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உத்தரவின் பேரில் சந்தேக நபர் செயல்பட்ட குற்றச்சாட்டு போன்ற குற்றச்செயல்களில் பிரதான சந்தேக நபராக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில், குற்றங்களைச் செய்ய சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டு வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களனி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46
news-image

மலையக மக்களுக்கு இந்திய அரசின்  குடியிருப்பு...

2025-11-07 17:00:15
news-image

செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம்...

2025-11-07 16:50:30
news-image

நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி...

2025-11-07 17:00:26
news-image

திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு!

2025-11-07 16:38:58
news-image

முச்சக்கர வண்டி விபத்து ; இளைஞன்...

2025-11-07 16:40:59