மருத்துவம், ஆயுர்வேதம், உணவு மற்றும் அழகு சாதன பரிசோதனைகளுக்கு நவீன ஆய்வுகூடம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

26 Sep, 2025 | 07:20 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

மருந்துகள், ஆயுர்வேதம், உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சம்பந்தமான பரிசோதனைகளை நடத்தக்கூடிய அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடத்தை நிர்மாணிப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு மருத்துவ பீட கேட்போர் கூடத்தில்  வியாழக்கிழமை (25) அரசாங்க மருந்தாளுநர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “உலக மருந்தாளுநர் தினம் - 2025” நினைவு விழாவில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்தார். 

உலக மருந்தாளுநர் சங்கமும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து செப்டம்பர் 25 ஆம் தேதியை உலக மருந்தாளுநர் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளன, மேலும் மருந்தாளுநர்கள், மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள்  மருந்து விரிவுரையாளர்களை கொண்ட உலக மருந்தாளுநர் சங்கம் உலகம் முழுவதும் 158 நாடுகளில் கிட்டத்தட்ட 04 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. "ஆரோக்கியமாக மருந்தாளுநராக சிந்தியுங்கள்" என்ற உலக மருந்தாளுநர் தினத்தின் கருப்பொருளுடன் கொண்டாடியது.

அங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ, 

நாட்டில் சுகாதாரத் துறையில் சுமார் 4,500 மருந்தாளுநர்கள் இருப்பதாகவும், மருந்தாளுநர் களுக்கு கடுமையான பணிப்பற்றாக்குறை  இருப்பதாகவும், இதனை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 2015-இன்படி, தனியார் மருந்தகங்கள் மருந்தகத்தின் தரம் மற்றும் தொழில்முறைத்தன்மையை 10 ஆண்டுகளுக்குள் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 10 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 05 ஆண்டுகள் கால அவகாசம் கேட்பது நியாயமில்லை. 

உலக மருந்தாளுநர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் இன்சுலின் பற்றாக்குறை இருப்பதாக நாட்டின் ஒரு முக்கிய தேசிய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டதாகவும், அந்தச் செய்தி முற்றிலும் தவறானது. 

இலங்கை அரசு மருந்தகக் கூட்டுத்தாபனம் அல்லது மருத்துவ விநியோகப் பிரிவிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் செய்தித்தாள் மேற்கண்ட செய்தியை வெளியிட்டதாகவும், மருத்துவ விநியோகப் பிரிவில், மற்றும் தேசிய மருத்துவமனையில் இன்னும் 03 வாரங்களுக்குப் போதுமான இன்சுலின் மருந்து கையிருப்பில் இருக்கின்றது. 

அக்டோபர் முதல் வாரத்திற்குள், இன்னும் ஒன்றரை மாதங்களுக்குப் போதுமான இன்சுலின் மருந்து கிடைக்கும் என்றும், அக்டோபர் இறுதிக்குள், இன்னும் 04 மாதங்களுக்குத் தேவையான இன்சுலின் மருந்து கிடைக்கும். 

மருந்து விநியோகஸ்தர்கள் தொழிலில் நேர்த்தி இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றும், மருந்துகளை கொள்வனவு  செய்வதற்கான அத்தனை செயல்முறைகளும் முடிந்த பிறகும், சப்ளையர்களால் மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் மருந்து விநியோகத்தில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. 

சிறுநீரக நோயாளிகளுக்கான ஒரு மருந்தில் சிக்கல் உள்ளது என்றும், சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட தரத்துடன் விவரக்குறிப்புகளை வழங்கிய சூழலில், வழங்குனர் ர் குறைந்த தரத்தில் பொருட்களை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது . 

இன்று, நாட்டில் பல உயர்மட்ட தொழிலதிபர்கள் உட்பட வணிகர்கள் மருந்து உற்பத்தியில் முதலீடு செய்துள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில், கணிசமான அளவு மருந்துகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும். 

மருந்து ஒழுங்குமுறைக்கான தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், மேலும் அனைத்து வகையான மருந்துகள், ஆயுர்வேத பொருட்கள், உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை பரிசோதனைகளை நடத்தக்கூடிய தெற்காசியாவிலேயே மிக நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை உருவாக்குவது குறித்த ஆலோசனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மருந்தாளுநர்கள் கவுன்சிலை நிறுவ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த நிகழ்வில் அரசு மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன, மருத்துவ விநியோகப் பிரிவின் இயக்குநர் டாக்டர் தேதுனு டயஸ், அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் மனுஜ் சி. வீரசிங்க, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் நிதுஷி சமரநாயக்க, இலங்கை மருந்து சங்கத்தின் தலைவர் பிரியந்த சஹாபண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவின் தலைமை மருந்தாளுநர் ஷாலனி பீரிஸ், மற்றும்  மருந்தாளுநர்கள், கொழும்பு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மருந்தாளுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மருந்தாளுநர்கள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 08:31:11
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56
news-image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி...

2025-12-06 21:21:55
news-image

அஸ்கிரிய மகாநாயக் தேரரை சந்தித்தார் ஜனாதிபதி...

2025-12-06 21:26:52
news-image

மாத்தளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்...

2025-12-06 20:56:24
news-image

மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை...

2025-12-06 20:15:08