இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையிலான கடன் சுமையுடன் தான் வாழ்வை எதிர் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு மட்டும்தான் கடன்களை சீரான வடிவில் திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகளும், பாக்கியமும் கிடைக்கிறது.
பெரும்பாலானவர்கள் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துவதில் பாரிய இடர்பாடுகளை தான் சந்திக்கிறார்கள். கடன் தொகையுடன் வட்டி சேர சேர அதனை திருப்பி செலுத்துவதற்கான மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, விரக்தி நிலையில் கடன்காரர்களாகவே தங்களை கருதிக் கொண்டு தங்களின் மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ளாமலே காலத்தை கடத்துகின்றனர்.
இந்தத் தருணத்தில் கடன்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் கழுத்தை நெறிக்கும் அளவைவிட கூடுதலாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கான சூட்சமமான வழிபாட்டை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : கிராம்பு
எம்முடைய சமையலறையில் இடம்பெறும் ஒரு பொருளும், வாசனை பொருளுமான கிராம்பினை வாங்கி வந்து வைத்துக் கொள்ள வேண்டும். 'கடனை நேர்மையாக திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடு இறைவா' என இறைவனை மனதார நினைத்து குறிப்பாக ஆஞ்சநேயரை மனதில் நிறுத்தி, அவருடைய வெற்றி மந்திரமான 'ஸ்ரீ ராம ஜெயம்' எனும் மந்திரத்தை நாளாந்தம் 108 முறை காலையில் எழுத வேண்டும்.
அதன் பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் 21 என்ற எண்ணிக்கையிலான முனை உடையாத முழு கிராம்பினை மாலையாக தொடுத்து, அதனை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திலோ அல்லது தனி சன்னதியுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு சாற்றி... 'கடன் சுமையிலிருந்து விடுவித்து விடு இறைவா' என ஆஞ்சநேயரை வணங்கிட வேண்டும்.
இதுபோல் தொடர்ந்து நீங்கள் ஏழு வாரம் கிராம்பு மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடத் தொடங்கினால் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழி பிறக்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM